திருடி சென்ற ஹெலிகாப்டர் ஹோட்டல் மீது மோதி விபத்து-விமானியின் நிலை என்ன ? - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் உணவகத்தின் மீது ஹெலிகாப்டர் மோதிய விபத்தில், அதில் பயணித்த விமானி உடல் கருகி உயிரிழந்தார். மேலும்  அவரை அடையாளம் காண்பதற்காக தடய அறிவியல் விசாரணைகள் நடந்து வருகின்றன.ஆஸ்திரேலியாவில் முக்கிய  சுற்றுலா தளங்களின் நகராக கெய்ர்ன்ஸ் விளங்கி வருகிறது. 

இந்நிலையில் இங்குள்ள ஹில்டன்ஸ் டபுள் ட்ரீ என்ற உணவகத்தின் மேற்கூரை மீது ஹெலிகாப்டர் ஒன்று மோதி விபத்தில் சிக்கியது. இரட்டை இயந்திரம் கொண்ட அந்த ஹெலிகாப்டர், மோதிய வேகத்தில் தீப்பிடித்து கொண்டது.இதனால், கட்டிடத்தின் மேல்பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், விமானி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உணவகத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோர் உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டதாக  குயின்ஸ்லேண்ட் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில், தரை பகுதியில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இருந்த போதிலும், 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. விமானியை அடையாளம் காண்பதற்காக தடய அறிவியல் விசாரணைகளும் நடந்து வருகின்றன. ஹெலிகாப்டரின் உரிமையாளர் கூறும்போது, எங்களுடைய விமானி அதனை ஓட்டவில்லை என்றும், ஹெலிகாப்டரை திருடி கொண்டு சென்றுள்ளனர் என்றும் கூறியுள்ளார். அதில் ஒரே ஒரு விமானி தவிர வேறு யாரும் பயணிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Crash on the stolen helicopter hotel what is the status of the pilot


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->