ட்விட்டரை விற்பனை செய்த எலான் மஸ்க் - காரணம் என்ன?
elon musk sales x
பிரபல சமூக வலைத்தளமாக இருந்த டிவிட்டரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலக பணக்காரருக்கும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார்.
அதன் பின்னர் எலான் மஸ்க் ட்விட்டரில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். அதாவது, டிவிட்டரின் பெயரை எக்ஸ் [X] என்றும், நிறுவனத்தில் பணியாற்றிய பல உயர்மட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து அந்த வலைத்தளத்தின் கட்டமைப்பிலேயே பல மாற்றங்களைக் கொண்டு வந்தார்.

இந்த நிலையில், எலான் மஸ்க் தனது எக்ஸ் நிறுவனத்தை ரூ.2.82 லட்சம் கோடிக்கு விற்பனை செய்துள்ளார். அதன் படி எலான் மஸ்க் தனது சொந்த நிறுவனமான X AI நிறுவனத்துக்கு எக்ஸ் தளத்தை விற்பனை செய்துள்ளார். X AI நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் செயல்பட்டு வருகிறது.
இதற்கு முன்னதாக எக்ஸ் தளத்தில் X AI நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாட்பாட் தொழில்நுட்பமான 'குரோக் 3' ஏஐ (Grok 3 AI) அறிமுகப்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.