வேட்பாளர் டொனல்டு ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு - பரபரப்பில் தேர்தல் களம்.!
gun shoot on donaldu trumph in america
வருகிற நவம்பர் மாதம் 5ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தது தேர்தலில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி மோத உள்ளன. ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்டோர் களமிறங்கியுள்ளார்.
இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால், இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டார்.
இதையடுத்து டொனால்டு ட்ரம்ப் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென கூட்டத்தில் இருந்த நபர் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் டொனால்டு டிரம்ப் காதில் ரத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருருந்த அதிகாரிகள் டிரம்ப்பை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
gun shoot on donaldu trumph in america