பாகிஸ்தான் | பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து! பயணிகளின் கதி? மீட்பு பணி தீவிரம்.! - Seithipunal
Seithipunal



பாகிஸ்தான், ராவல்பிண்டியில் இருந்து இன்று கில்கிட் நோக்கி பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற பேருந்து மலை பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்து விட்டனர். அவர்களது உடல்கள் மீட்கபட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்துக்குள்ளான பேருந்தில் குறைந்தது 30 பயணிகள் பயணித்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan bus accident 10 killed


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->