இறைத்தூதர் முகமது நபி குறித்து அவதூறு: 5 பேருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை! - Seithipunal
Seithipunal



இஸ்லாமிய இறைத்தூதர் முகமது நபியை குறித்து இணையத்தில் அவதூறு பரப்பியதாக 5 பேருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில், கடவுள் நிந்தனை மிகப்பெரிய குற்றமாக பார்க்கப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவு

இந்த நிலையில், ராவல்பிண்டி நீதிமன்றம், இஸ்லாமிய இறைத்தூதர் முகமது நபியை குறித்து இணையத்தில் அவதூறு பரப்பியதாக தனியார் அமைப்பின் புகாரின் அடிப்படையில் 5 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

கூடுதலாக, ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. ஐந்து பேரில் ஒருவர் ஆப்கானிய நாட்டைச் சேர்ந்தவர்.

மேல்முறையீடு:

தண்டனைக்கு உள்ளவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு இதுவரை மரண தண்டனை நிறைவேற்றியதாக தகவல் இல்லை.

இதுபோன்று நூற்றுக்கணக்கானோர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் வரை 767 பேர் இப்படியான வழக்குகளில் சிறையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pakistan court Death Penalty Judgement


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->