கெர்சன் பகுதியில் ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதுவரை உக்ரைனின் நான்கு முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றி தங்களுடன் இணைத்துக் கொண்டுள்ளது.

தொடர்ந்து போராடிவரும் உக்ரைன் படைகள் கணிசமான இடங்களை ரஷ்யாவிடமிருந்து கைப்பற்றியுள்ளது. குறிப்பாக போரின் தொடக்கத்தில் இருந்தே ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்த கெர்சன் பகுதியை உக்ரைன் படையினர் போராடி மீட்டுள்ளனர்.

இந்நிலையில் கெர்சனின் முக்கிய பகுதிகளின் மீது ரஷ்ய படைகள் டிரோன்கள் மற்றும் ஏவுகணை மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் கெர்சன் பகுதியில் ஏராளமான உள் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன் கெர்சன் பகுதியில் போர்கால மருத்துவமனையின் மீது ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த சனிக்கிழமை கெர்சன் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 58 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Russia attacks kherson region


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->