மோசமான வானிலை: 40 விமானங்கள் தொடர் ரத்து! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


தென் கொரியா, தெற்கு பகுதியில் உள்ள ஜேஜூ தீவில் மோசமான வானிலை மிகவும் மோசமாக இருப்பதால் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். 

விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த 20 விமானங்களும் எதிர் மார்க்கமாக வர இருந்த 20 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மேலும் ஜேஜூ தீவுக்கு பலத்த காற்று வீசும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயணம் மேற்கொள்ள உள்ள பயணிகள் தங்கள் விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு தகவலை கேட்டு அறிய வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் கொரியாவில் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணி நிலவரப்படி மழை பெய்து வருவதாகவும், பலத்த காற்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்வதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

South Korea 40 flights canceled


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->