இந்து கோவில் சுவற்றில் மோடிக்கு எதிரான வாசகம்: கைவரிசை காட்டிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!
US Hindu temple defaced pro Khalistan slogans
அமெரிக்கா, நெவார்க் நகரில் உள்ள சுவாமி நாராயணன் கோவில் சுவரில் எழுதப்பட்ட வாசகங்களுடன் இந்து அமெரிக்கன் அறக்கட்டளை எக்ஸ் வலைத்தளத்தில் புகைப் படங்களை பகிர்ந்துள்ளது.
இந்தியாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிரான வாசகங்கள் கோவிலின் பல சுவர்களில் எழுதப்பட்டுள்ளன.
கோவிலுக்கு வரும் மக்களை காயப்படுத்துவதற்காகவும் வன்முறை பயத்தை உருவாக்குவதற்காகவும் இந்த வாசகங்கள் எழுதப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது போன்ற சம்பவங்கள் அண்டை நாடான கனடாவில் நடந்துள்ளது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் பிரிவினைவாத உணர்வை தூண்ட முயற்சிக்கும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் நடவடிக்கைகளால் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இந்தியா கவலைக் கொண்டுள்ளது.
English Summary
US Hindu temple defaced pro Khalistan slogans