காட்டு தீயால் நிலைகுலைந்த ஹவாய் நகரம் - 6 பேர் மரணம்! - Seithipunal
Seithipunal


ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயினால் இதுவரை 6 பேர் இறந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ள நிலையில், சுமார் 271 கட்டிட அமைப்புகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணம் ஹவாய் தீவு அமெரிக்க நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதில் மொத்தம் 8 தீவு நகரங்களை உள்ளடக்கியது. 

அதில் இரண்டாவது பெரிய நகரமாக மவுயி உள்ளது. இந்தத் தீவு 727 சதுர மைல் பரப்பளவில் உள்ள நகரத்தில் கடந்த 2020 கணக்கெடுப்பின்படி 1.64 லட்சம் மக்கள் வாழ்கின்றனர்.

மவுயி நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள காடுகளில், ஏற்பட்ட தீ நகரத்திற்குள் பரவி நேற்று, டோரா சூறாவளி ஹவாய் தீவை கடந்ததால் தீ வேகமாக பரவியது. 

இந்தப் பகுதியில் மக்கள் உயிர்வாழ பாதுகாப்பான இடம் இல்லை என பாதிக்கப்பட்ட இடத்தை வான்வழியாக சென்றபோது பார்த்ததாக அதன் மூலம் பயணித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீயின் பரவல் குறைந்த நிலையில் அமெரிக்க விமானப்படை, கப்பல் படை மற்றும் மவுயி தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த விபத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடற்கரையோரம் அமைந்துள்ள லஹைனா பகுதியில் அதிக பாதிப்புகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காட்டுத் தீயின் பரவலுக்கு உலக அளவில் காலநிலையில் ஏற்பட்ட மாற்றம், அதீத வெப்பம், அதிக காற்று, குறைந்த ஈரப்பதம் மற்றும் உலர்ந்த தாவரங்கள் உள்ளிட்டவை காரணமாக சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wildfires destabilized city of Hawaii 6 people died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->