கன்னட அமைப்பினர் செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்ட கன்னட நடிகர்! - Seithipunal
Seithipunal


நடிகர் சித்தார்த் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் தற்போது 'சித்தா' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். 

இந்த படம் இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட  மொழிகளில் சித்தா படம் நேற்று வெளியானது. 

இந்நிலையில் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சித்தார்த் பெங்களூரு சென்று அங்க நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அங்கு வந்த கன்னட அமைப்பினர், படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டிற்கு காவிரி விவகாரத்தில் கன்னட அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழ் நடிகரான சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் நடிகர் சித்தார்த் மேடையில் இருந்து வெளியேறி நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. 

நடிகர் பிரகாஷ்ராஜ் சித்தார்த்தை தொந்தரவு செய்வது ஏற்கத்தக்கது அல்ல என அவரது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில், நீண்ட காலமாக இருந்து வரும் பிரச்சனையை தீர்க்காமல் வைத்திருக்கும் அரசியல் கட்சிகளையும், மத்திய அரசையும் அழுத்தம் கொடுக்காமல் சாதாரண மக்களையும் சித்தார்த் போன்ற கலைஞர்களை தொந்தரவு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. 

அனைத்து கன்னட மக்களின் சார்பாக ஒரு கன்னடராக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kannada actor condemned actions of Kannada organizations


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->