நடிகையின் பாலியல் புகார்! மார்க்சிஸ்ட் எம்எல்ஏ மீது மேலும் ஒரு வழக்கு!
police case file Kerala MLA mukesh
கேரள மாநிலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏவும், நடிகருமான முகேஷ் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே அவர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு 'நாடகமே உலகம்' என்ற மலையாள திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் தற்போது மீண்டும் நடிகர் முகேஷ் மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு நிகழும் பாலியல் பிரச்சனை குறித்து ஹேமா ஆணையம் அறிக்கை வெளியாகி உள்ளது. ஹேமா ஆணையத்தின் அறிக்கையில் பல நடிகைகள் புகார் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள நிலையில், பல நடிகர்கள் இது குறித்து தங்களின் கருத்துகளையும், ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே ஹேமா ஆணையத்தின் அறிக்கை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று, நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக மலையாள சூப்பர் ஸ்டார்கள் மோகன்லால், மம்முட்டி ஆகியோர், ஹேமா ஆணையத்தின் அறிக்கை குறித்து தங்களது கருத்துக்களையும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
police case file Kerala MLA mukesh