இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு... சிவகங்கையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்...! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் நாளை காலை 10 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2ம் மற்றும் 3ம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

அதன்படி, நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணியளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

கல்வி தகுதி:

பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை,

ஐ.டி.ஐ,

டிப்ளமோ 

• இந்த முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

• இம்முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

• மேலும், இம்முகாமில் இலவச திறன் பயிற்சிக்கான விண்ணப்பப்படிவம், போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பப்படிவம் ஆகியவையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tomorrow private sector employment camp in sivagangai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->