தலித், SC என்பதெல்லாம் எவ்வளவு கேவலமான அடையாளங்கள் என்பது இப்போதுதான் திராவிட மரமண்டைகளுக்கு புரிகிறதுபோல… ஷியாம் கிருஷ்ணசாமி.!
Shyam Krishnasamy TWITS
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவுகள் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில்,
"தலித், SC என்பதெல்லாம் எவ்வளவு கேவலமான அடையாளங்கள் என்பது, அவை இளையராஜா மீது பூசப்பட்ட பிறகு தான் திராவிட மரமண்டைகளுக்கு புரிகிறதுபோல…
இசைஞானிக்கு மட்டுமல்ல, சுயமரியாதை உள்ள எவருக்கும் இந்த அடையாளங்கள் கறை தான்! இழுக்கு தான்! இதில ஆதி திராவிடர் என்ற இவனுங்க கண்டுபிடிப்பு வேற
MP பதவிக்கு பரிந்துரைத்து, ‘தலித்’ என குறிப்பிட்டது போல தான் சாதாரண உரிமைகளை பெறுபவர்களை SC பையன், ஹரிஜன பொண்ணு என்று அடையாள படுத்துவதும்.
SC, தலித் அடையாளங்கள் எவருக்கும் என்றும் கசக்கவே செய்யும்!
சென்னை மேயர் பதவியை SCக்கு ஒதுக்கினோம் என கவிதை எழுதும்போது இனித்ததோ?!
அருந்ததியர்களின் சுயமரியாதை என்னாச்சு? வெறும் 3% அடகு வைத்துவிட்டீர்களா?
இதே போல நாயக்கர் வீட்டில் மோர் குடித்தார், தேவர் வீட்டில் பால் குடித்தார், தேவேந்திரர் வீட்டில் தயிர் குடித்தார் என்று எழுதும் துணிவு இவர்களுக்கு வந்திருக்குமா?
அருந்தத்தியர், நரிக்குறவர் மட்டும் என்ன…?" என்று திமுகவுக்கும், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.