செல்போனில் விளையாடிக்கொருந்த 2 சிறுவர்கள் மீது ரயில் மோதி பலி!
2 boys who were playing on cell phones were killed by a train
சத்தீஷ்காரில், தண்டவாளத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் மீது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஷ்கார் மாநிலம், டிரக் மாவட்டம் ரிசலி பகுதியை சேர்ந்த 14வயதான வீர் சிங் , புரன் ஷகு ஆகிய இரண்டு சிறுவர்கள், நேற்று இரவு ரிசலி பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, அதே தண்டவாளத்தில் ரெயில் வருவதை கவனிக்காத சிறுவர்கள் தொடர்ந்து செல்போனில் கேம் விளையாடியுள்ளனர். இதையடுத்து அதிவேகமாக வந்த ரெயில் சிறுவர்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் வீர் சிங் , புரன் ஷகு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவர்களின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டவாளத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மீது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
2 boys who were playing on cell phones were killed by a train