வன்கொடுமை!!! 4 வயது தலித் சிறுமிக்கு நடந்த கொடூரம்!!! 80 வயது முதியவரை என்ன செய்வது....? - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹாரில் புக்ராசி சௌகி பகுதியில்  தனது பக்கத்தில் வீட்டில் வசித்த 4 வயது தலித் சிறுமியை, 80 வயதான முதியவர் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இச்சம்பவம், நேற்று மாலை சிறுமி தனது வீட்டு மாடியில் தனியாக விளையாடிகொண்டிருந்தபோது அங்கு சென்ற முதியவர் மிட்டாய் தருவதாக ஏமாற்றி அங்கு வைத்தே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்.

இதையறிந்த குடும்பத்தினர் காவலில்  புகார் அளித்தனர்.மேலும் சிறுமி மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள். இந்த சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் முதியவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

மேலும் சிறுமியின் மருத்துவ அறிக்கை கிடைத்த பின்னர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவலர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கிறது.இதற்கு தீர்வு காண தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

80 year old man abuse 4 year old Dalit girl


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->