அபாயம்!!! வங்கி ஊழியர்களின் தொடர் போராட்டம்...! நான்கு நாட்களுக்கு சேவை முடங்கும் என எச்சரிக்கை...!!!! - Seithipunal
Seithipunal


புதுடெல்லியில் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மார்ச் 24, 25 தேதிகளில் 48 மணி நேரம் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.மேலும் இந்த போராட்டத்தில் 8 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

தற்போது போராட்ட அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், வங்கி பணிகள் 4 நாட்கள் முடங்கும் அபாயம்  மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு மாதம் 2 மற்றும் 4வது சனிக்கிழமை விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையொட்டி  இம்மாதத்தில் மார்ச் 22ம் தேதி 4வது சனிக்கிழமையாகும். அதற்கு மறுநாள்(மார்ச் 23) ஞாயிறு விடுமுறை.போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள மார்ச் 24 மற்றும் 25 தேதிகளில் வங்கிகள் இயங்காது.

அவ்வகையில் ஒட்டுமொத்தமாக 4 நாட்கள் வங்கிகளில் சேவை இருக்காது என தெரிகிறது.இதைத்தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பதால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பணவரிவர்த்தனைகளை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இச்செய்தி தற்போது மக்களிடையே சலசலப்பு பேச்சுவார்த்தையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bank employees continue to protest Warning that services will be disrupted for 4 days


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->