பாஜக மகளிரணி துணைத்தலைவி மீது துப்பாக்கி சூடு; போலீசார் வழக்குப்பதிவு..! - Seithipunal
Seithipunal


மத்தியபிரதேச மாநிலம் டியா மாவட்டத்தை சேர்ந்த பாஜக மகளிரணி துணைத்தலைவி நீத்து விஸ்வகர்மா மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் நேற்று ரத்தன்கர்க் மாதா கோவிலுக்கு சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோவிலுக்கு செல்லும் வகையில் நீத்து விஸ்வர்கர்மா மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், துப்பாக்கி சூட்டில் நீத்து  விஸ்வகர்மா காலில் காயம் ஏற்பட்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக  போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீத்து மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய 03 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP womens wing vice-president shot at


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->