140 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள குனா மாவட்டம் பிப்லியா கிராமத்தை சேர்ந்த சுமித் மினா என்ற பத்து வயது சிறுவன் நேற்று மாலை 5 மணியளவில் கிராமத்தின் அருகே உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். சுமார் 140 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை 16 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டனர்.

உடனே அந்தச் சிறுவன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் சுமித் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

boy died drowned bore well in gujarat


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->