காரில் வந்து காதலியை குத்தி கொன்ற காதலன் ; அடுத்து அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


அசாமில் வீட்டுக்கு வெளியே வாகனத்திற்காக காத்திருந்த காதலியை, காரில் வந்த காதலன் கத்தியால் குத்தி  குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடியிருக்கிறார்.

சிறு சிறு பிரச்சனைகளுக்காக காதலன் ,காதலியை வெட்டுவதும் காதலி ,காதலனை தாக்குவது போன்ற சம்பவங்கள் இன்றும் நடந்துதான் வருகிறது .அப்படி ஒரு சம்பவம் நிகழ்த்து அது கொலையில் முடிந்திருக்கிறது.அசாமின் கவுகாத்தி நகரில் லேட் கேட் பகுதியை சேர்ந்த மவுசுமி கோகாய், பூபென் தாஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார் .சம்பவத்தன்று பூபென் தாஸ்கோகாயை அவருடைய வீட்டுக்கு வெளியே கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியுள்ளார்.

இதுபற்றி டி.ஜி.பி. ஜி.பி. சிங் வெளியிட்ட செய்தியில், ஆன்லைன் வழியே வாகனம் ஒன்றை முன்பதிவு செய்து விட்டு, கோகாய் வீட்டுக்கு வெளியே நின்றபோது, காரில் வந்த பூபென் தாஸ் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்து, கோகாயை குத்தி கொலை செய்து விட்டு தப்பியிருக்கிறார்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கோகாயை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது  அவர் உயிரிழந்து விட்டார் என்றும்  இதன்பின்னர், போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், பூபென் தாஸை போலீசார் பிடித்தபோது, அவர் கத்தியால் தன்னைத்தானே குத்தி கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்றும் அவரை மீட்டு போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு முன், பூபென்னுக்கு எதிராக பான் பஜார் காவல் நிலையத்தில், அவரால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது என கூறி கோகாய் போலீசில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Boyfriend stabs girlfriend to death in carThe next shocking incident


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->