தொடர் வெடிகுண்டு மிரட்டல் - திருப்பதி கோவிலில் கமாண்டோ பாதுகாப்பு.! - Seithipunal
Seithipunal


ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள வரதராஜ சாமி கோவில், இஸ்கான் கோவில் மற்றும் ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டலால் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர்.

இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து பக்தர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ள நிலையில் திருப்பதி மலை முழுவதும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சிறப்பு பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு கட்டுப்பாட்டு மலைப்பகுதியில் அறை திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கமாண்டோ பாதுகாப்பு படையினர் இரவு நேரத்தில் திருப்பதி மலை முழுவதும் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், திருமலை முழுவதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆக்டோபஸ் கமாண்டோ படையினருடன் மத்திய தொழில் பாதுகாப்பு மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், திருமலையில் சந்தேக நபர்களின் நடமாட்டத்தை கண்டறிவதற்காக 28 இடங்களில் 200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன" தேவஸ்தானத்தின் இந்த முயற்சியால் பொதுமக்கள் பதற்றம் இல்லாமல் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

camondo security in tirupathi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->