சத்தீஸ்கர் | கிணற்றுக்குள் இறங்கியவர்கள் பிணமாக மீட்பு... மர்மம் என்ன? - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர், சம்பா மாவட்டத்தில் கிணறுக்குள் நச்சு வாயு சுவாசித்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர், ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள கிகிர்டா கிராமத்தில் இன்று காலை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

மேலும் உயிரிழந்தவர்கள் ராம்சந்திர ஜெய்ஸ்வால், ரமேஷ் படேல், ராஜேந்திர படேல், ஜிதேந்திரா படேல் மற்றும் திகேஷ்வர் சந்திரா என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஜெய்ஸ்வால் கிணறுக்குள் விழுந்த மரக்கட்டைகளை எடுக்க சென்றுள்ள போது திடீரென அவர் மயக்கமடைந்துள்ளார். 

பின்னர் அவரது குடும்பத்தினர் உதவிக்காக அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்துள்ளனர். இதற்காக படேல் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கிணற்றுக்குள் இறங்கிய நிலையில் நான்கு பேரும் வெளியே வரவில்லை. 

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக போலீசாருக்கும் மீட்புபடையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றுக்குள் இருக்கும் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் கிணற்றுக்குள் நச்சு வாயு சுவாசித்ததால் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chhattisgarh well descended rescued corpses


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->