கேரளாவில் கொடூரம்: வீட்டின் முன்பு கல்லூரி மாணவி கழுத்து அறுத்து கொலை.! போலீசார் விசாரணை.!
college girl was murder by slitting her throat in front of her house in kerala
கேரள மாநிலத்தில் வீட்டின் முன்பு கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வடசேரிகோணம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
இதனால் குடும்பத்தினரும், அப்பகுதியில் இருந்தவர்களும் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்பொழுது சங்கீதா கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். மேலும் அங்கிருந்து வாலிபர் ஒருவர் தப்பி ஓடி உள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சங்கீதாவை கொலை செய்த வாலிபர் யார்? எதற்காக கொலை செய்தார்? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
college girl was murder by slitting her throat in front of her house in kerala