திருமணம் செய்ய மறுத்த காதலன்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.!
cuddalore women sucide in kerala
கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் அருகே ம.கொளக்குடி என்றக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இளங்கோவன் - மணிமேகலை தம்பதியினர். இவர்களது மகள் பூமிகா. இந்த நிலையில், இளங்கோவன் இறந்து விட்டதனால், மணிமேகலை கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். மகள் பூமிகா தனது அண்ணன், அக்காளுடன் சொந்த ஊரில் வசித்து வந்தார்.
இதற்கிடையே பூமிகாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் நெருங்கி பழகியதால் பூமிகா 5 மாத கர்ப்பமாகியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பூமிகா தனது காதலனிடம் தான் கர்ப்பமாக இருப்பதை தொிவித்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கூறியுள்ளார். அதற்கு அவர் மறுத்துவிட்டார்.

இதனால் மனமுடைந்த பூமிகா, கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் தங்கி வேலை பார்க்கும் தனது தாய் மணிமேகலை வீட்டிற்கு சென்று, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் பூமிகா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
cuddalore women sucide in kerala