தலைநகர் டெல்லியில் கட்டிட விபத்தில் 3 பேர் பலி! 14க்கும் மேற்பட்டோர் படுகாயம்! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரோல் பாக்கில் நடந்த இந்த கட்டிட விபத்தில், ஈடுபாடுகளில் சிக்கிய 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த டெல்லி தீயணைப்புத் துறையினர், போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை 9.11 மணிக்கு சம்பவம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து டெல்லி தீயணைப்பு துறையினர் 5 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கிய 3 பேர் பலியான நிலையில், 14 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளதாகவும், இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Building Collapse accident 3 people death


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->