கடும் குளிரால் டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை.! - Seithipunal
Seithipunal


நாடுமுழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து முடிவடைந்த நிலையில், தற்போது பனிக்காலம் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக வடமாநிலங்களான டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் சிலநாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இதனால் நிறைய சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

அந்தவகையில், டெல்லியில் அதிகாலைப் பொழுதில் ஆட்களை மறைக்கும் அளவுக்கு கடும் பனிப்பொழிவும், அதிக குளிரும் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் அதிகாலையில் எழுந்து பள்ளிக்கு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. 

பொதுவாக டெல்லியில், இதுபோன்ற காலக்கட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை டெல்லி கல்வி இயக்குனரகம் சார்பில் நேற்று மாலை வெளியிடபட்டுள்ளது. 

அதில், ஜனவரி 1-ஆம் தேதி முதல் 15-ந் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் ஒன்பது முதல் பன்னிரெண்டாம்  வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delli school holiday due to heavy cold


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->