மனைவி செய்த தவறுக்கு மகனுக்கு தண்டனை! தந்தைக்கு போலீசார் வலைவீசிச்சு! - Seithipunal
Seithipunal


ஆந்திரா, அஸ்தலிங்கய்ய பள்ளியைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மனைவி சுஜாதா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் இளைய மகன் சோமேஸ்வரன் ரெட்டி (வயது 10) அங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். 

சிவசங்கர், மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்நிலையில் கணவன் மனைவியிடையே நேற்றிரவு தகராறு ஏற்பட்டு முற்றியதால் தனது இரண்டாவது மகனை கொலை செய்ய சிவசங்கர் முடிவு செய்தார். 

சோமேஸ்வர ரெட்டி நேற்று அதிகாலை வீட்டில் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது சிவசங்கர் கத்தியை எடுத்து வந்து மகனை சரமாரியாக வெட்டினார். 

இதனால் சிறுவன் வலி தாங்காமல் அலறிய மகனின் சத்தம் கேட்ட சுஜாதா மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது சிறுவன் ரத்த வெள்ளத்தில்  துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

அதற்குள் அங்கிருந்து தப்பியசிவகங்கை தற்போது தலைமறைவாக உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோமேஸ்வர ரெட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சிவசங்கரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father hacked son death


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->