15 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் சமீப காலமாகவே விமானத்தின் மூலம் தங்கம் கடத்தப்பட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் படி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது, மலேசியா நாட்டின் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஒரு பயணியின் பையில் இருந்த சிலிண்டர் ரெகுலேட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 194 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.15 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பட்டு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

gold seized in trichy airport


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->