ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் - காப்பாற்றச் சென்ற சக மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள வாபியில் கே.பி.எஸ். கல்லூரியின் எட்டு மாணவர்கள் கொண்ட குழு நேற்று மாலை வல்சாத் மாவட்டத்தில் உள்ள கோலி நதி உருவாகும் இடமான பாண்டவ் குண்டிற்கு சுற்றுலா சென்றிருந்தனர்.

அங்கு மாணவர்களில் ஒருவர் நீந்துவதற்காக ஆற்றில் குதித்தார். ஆனால் அவர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்க தொடங்கினார். இதைபார்த்த சக மாணவர்களில் நான்கு பேர் அந்த வாலிபரைக் காப்பாற்ற நீரில் குதித்தனர். ஆனால் அவர்களும் நீரில் மூழ்க தொடங்கினர்.

இதனால், அதிர்ச்சியடைந்த மீதமுள்ள மாணவர்கள் உதவிக்காக கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு அருகிலுள்ள சமூக சுகாதார மையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை மருத்துவர்கள் சக மாணவரை காப்பற்ற சென்ற நான்கு மாணவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் மூழ்கிய சக மாணவரை காப்பற்ற சென்ற நான்கு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

four college students died drowned water in gujarat


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->