விடுதி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - கையும் களவுமாக சிக்கிய விடுதி காப்பாளர்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள எல்லூரு நகரில் இயங்கி வரும் பெண்கள் விடுதி ஒன்றில் தங்கிய சில மாணவிகள், விடுதி மேலாளர் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், பலாத்காரம் செய்ததாகவும் போலீசில் புகார் அளித்தனர். அதன் படி போலீசார் விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். 

அந்த விசாரணையில், பெண்கள் விடுதியை நடத்தி வந்த சசிகுமார் என்பவர் பிற்படுத்தப்பட்டோர் ஆண்கள் விடுதியின் நல அலுவலராகவும் பணி செய்து வந்துள்ளார். கொரோனா காலத்தில் ஏற்கனவே விடுதி நடத்தியவர்கள் அதை தொடராமல் நிறுத்திவிட்டதால், விடுதி நிர்வாகத்தை சசிகுமார் நடத்தி வந்துள்ளார். 

ஆனால், அதை சசிகுமார் அரசு அனுமதியின்றி நடத்தி வந்துள்ளார். அவர் தனது இரண்டாவது மனைவியை விடுதி வார்டனாகவும், தனது மருமகளை பராமரிப்பாளராகவும் வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே சசிகுமார் தலைமறைவாகிவிட்டார். அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சசிகுமாரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை பணியிடை நீக்கம் செய்து அறிவித்துள்ளது.

சசிகுமாரின் விடுதியில் 45 மாணவிகள் தங்கியுள்ளனர். அவர்களில் 2 பேர் கல்லூரி மாணவிகள், மற்றவர்கள் பள்ளி மாணவிகள். "பாதிக்கப்பட்ட மாணவிகள் அவர்களது பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டதாகவும், தலைமறைவான சசிகுமாரையும், அவரது அத்துமீறலுக்கு உடந்தையாக இருந்த அவரது 2-வது மனைவியையும் தேடி வருவதாகவும்" போலீசார் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

hostel owner arrested for harassment case in andira


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->