கும்பமேளா கூட்ட நெரிசல்: தவறான நிர்வாகமே காரணம் - ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!  - Seithipunal
Seithipunal


விஐபி கலாசாரத்தை கட்டுப்படுத்தி, பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.மேலும் மகா கும்பமேளா கூட்ட நெரிசலுக்கு தவறான நிர்வாகமே காரணம் என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 14ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக மகா கும்பமேளா திகழ்ந்துவருகிறது . இந்த கும்பமேளாவில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் மற்றும் பிரபலங்கள் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

இந்நிலையில், அமாவாசை தினமான இன்று மகா கும்பமேளாவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் அதிகாலை புனித நீராட ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.இதனால் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் இன்று அதிகாலை திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 

அப்போது திடீரென கூட்ட  ஏற்பட்டது  இந்த கூட்ட நெரிசலால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இதனால், பலர் ஒருவர் மீது ஒருவர் விழுந்தஇந்த சம்பவத்தில் 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் பெண்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.மேலும்  உயிரிழப்பு குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் மகா கும்பமேளாவில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதையடுத்து மகா கும்பமேளா கூட்ட நெரிசலுக்கு தவறான நிர்வாகமே காரணம் என ராகுல் காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"பிரயாக்ராஜ் மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.மேலும்  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்றும்  தவறான நிர்வாகம், கட்டுப்பாடின்மை மற்றும் சாதாரண பக்தர்களுக்கு பதிலாக விஐபிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தியது ஆகியவைதான் இந்த துயர சம்பவத்துக்கு காரணம் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த கும்பமேளா நிறைவடைய இன்னும் சில நாட்கள் இருக்கிறது என்றும் இன்னும் பல இடங்களில் புனித நீராடல்கள் நடைபெற இருக்கின்றனஎன்றும்  விஐபி கலாசாரத்தை கட்டுப்படுத்தி, பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்து அரசு சிறந்த ஏற்பாடுகளை செய்து, இது போன்ற துயர சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க அரசு தனது நிர்வாகத் திறனை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளராகுல் காந்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுமாறு காங்கிரஸ் தொண்டர்களையும் தலைவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kumbh stampede: Rahul Gandhi blames mismanagement 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->