கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட இளைஞர்கள்! அடுத்தடுத்து பலியான சோகம்! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டம் மல்வான் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற தர்கலி கடற்கரையில் புணேயில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது இரு இளைஞர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 22 ஆம் தேதி காலை 11.30 மணியளவில், சுற்றுலாப் பயணிகள் ஐந்து பேர் கடலில் நீந்தி விளையாடிக்கொண்டிருந்தனர். இவர்களில் மூவர் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றுவிட, அங்கு நீந்த முடியாமல் உயிருக்கு போராடினார்கள். அருகிலிருந்த மீனவர்கள் விரைந்து செயலில் இறங்கி, அவர்களை கரைக்கு மீட்டனர். ஆனால், கடலில் மூழ்கிய சுபம் சுசில் சோனாவானே (வயது 22) மற்றும் ரோஹித் பாலாசாஹேப் சோலி (வயது 21) உயிரிழந்தனர்.  

அதிகக் காயங்களுடன் மீட்கப்பட்ட ஓம்கர் போசாலே (வயது 23) முதலில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.  

சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர், பலியான இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த அனர்த்தம் சுற்றுலாப் பயணிகள் கடலில் நீந்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக இருப்பதை மேலும் எடுத்து காட்டுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maharashtra Beach Youngster Death


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->