உ.பியில் சோகம்.. சண்டையை தடுக்க சென்ற வாலிபர் மாரடைப்பால் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கவுதம புத்தா நகர் மாவட்டம் ரோசா ஜலால்பூர் கிராமத்தில் ரவிகாந்த் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முகேஷ் என்பவரின் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதனால், இருவருக்கும் இடையே நடுரோட்டில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில், சாலையோரம் நடந்து சென்ற ராஜ்குமார் என்பவர் சண்டையை தடுக்க சென்றுள்ளார். அப்போது ராஜ்குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதைப்பார்த்து ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு ராஜ்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man died for heart attack in uttar pradesh


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->