நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்ட அமேசான் ஊழியர் திடீர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூல் பெனுமடா கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த வம்சி என்ற வாலிபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மணமக்களுக்கு பரிசை வழங்கியுள்ளார். 

இதைத் தொடர்ந்து வம்சி பதற்றமான நிலையில் இருந்ததையடுத்து தனது நண்பர்களிடம் ஏதோ சொல்ல வந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனே அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

அங்கு வம்சியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த வாலிபர் வம்சி பெங்களூருவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணியாற்றி வந்தது தெரிய வந்தது.

சமீப காலமாக உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் மாரடைப்பால் வாலிபர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த உயிரிழப்புக்கு வாழ்க்கை முறை, காற்று மாசுபாடு, மன அழுத்தம், அதிக உடற்பயிற்சி மற்றும் ஸ்டெராய்டுகள் உள்ளிட்டவை வழிவகுக்கும் காரணிகள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man died friend marriage in andira


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->