புதுச்சேரி மாநிலத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அமைச்சர் நமச்சிவாயம்.!
Pondicherry School and College Leave Tomorrow 30 Oct 2021 Due to Rain Says by Minister Namasivayam
புதுச்சேரி மாநிலத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் மழை காரணமாக விடுப்பு வழங்கப்படுகிறது என அமைச்சர் அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நல்ல கனமழை பெய்து வருகிறது.
![](https://img.seithipunal.com/media/Rain%20Tamilnadu%20b.jpg)
நேற்று இரவு தொடர்ச்சியாக, இன்று காலை முதல் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டமான திருவாரூர், கடலூர் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் நெடுநேரமாக மின்வெட்டு பிரச்னையும் ஏற்பட்டு இருந்தது. மழை அதிகமாக பெய்யும் மாவட்டங்களில் ஆட்சியர்கள் தரப்பில் பள்ளிகளுக்கு விடுமுறையும் வழங்கப்பட்டு இருந்தது.
![](https://img.seithipunal.com/media/Pudhucher.jpg)
இந்நிலையில், புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "புதுச்சேரி மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Pondicherry School and College Leave Tomorrow 30 Oct 2021 Due to Rain Says by Minister Namasivayam