15ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வாய்ப்பு...!!! வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிரான வழக்கு....?
Possibility taking up case for hearing 15th Case against amendment Waqf Board Act
கடந்த வாரம், வக்பு சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து சட்டமாக உள்ளது.இந்நிலையில் வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ்,ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
இதில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருகிற 15ஆம் தேதி உச்சநீதி மன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அரசியல் ஆரவாளர்கள் இடையே சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் இதற்கான தீர்வு விரைவில் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
English Summary
Possibility taking up case for hearing 15th Case against amendment Waqf Board Act