மூடநம்பிக்கை! வயிற்று வலியை குணப்படுத்த வாலிபரின் வயிற்றில் கற்பூரம் ஏற்றி வயிற்றை வெட்டிய பூசாரி! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் வயிற்று வலியை குணப்படுத்த பூசாரி வாலிபரின் வயிற்றை கோடரியால் வெட்டி கட்டு போட்ட சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் மேடகுடா கிராமத்தில் காலிங்கேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக பணிபுரிபவர் ஜக்கப்பா கட்டா. அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தீராத வயிற்று வலியை  குணப்படுத்த கோவிலுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

அந்த கோவிலில் யார் ஒருவருக்கு வயிற்று வலி ஏற்பட்டால் கோடரிகள் வயிற்றில் வெட்டி மஞ்சள் பொடி கொட்டப்பட்டு கட்டு போடப்படுகிறது. இவ்வாறு செய்தால் தீராத வலி குணமாகி விடும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. சம்பவத்தன்று பூசாரி அந்த வாலிபரை படுக்க வைத்து உடலில் எங்கு வலி அந்த இடத்தில் கற்பூரம் ஏற்றியதாக கூறப்படுகிறது.

தரையில் படைத்திருக்கும் அந்த வாலிபரின் கைகளையும் கால்களையும் மற்றவர்கள் பிடித்துக் கொள்கிறார்கள். அந்த வாலிபரின் வயிற்றில் ஓங்கி இரண்டு முறை பூசாரி வெட்டுகிறார். அவர் முதல் முறை வெட்டு கையில் வயிற்றில் கிழிந்து கோடாரி சற்று உள்ளே செல்கிறது ரத்தமும் அதிகமாக வருகிறது. வாலிபர் வலி தாங்க முடியாமல் அலறி துடிக்கிறார். இருப்பினும் விடாமல் பூசாரி கோடாடியை எடுத்தவுடன் அந்த வாலிபரின் வயிற்றில் மஞ்சள் பொடி கொட்டப்பட்டு  கட்டு போடுகிறார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி லோகாபுரம் போலீசார் உத்தரவிட்டுள்ளனர். அதன் பேரில் போலீசார் இது பற்றி வழக்கு பதிவு செய்து பூசாரி ஜக்கப்பா கட்டாவை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Priest cuts boy stomach with ax to cure stomach ache in Karnataka


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->