ஸ்டாண்ட் செய்ய BMW காரை வாடகைக்கு எடுத்த பள்ளி மாணவர்கள் - கேரளாவில் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


கேரளாவில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் BMW காரை வாடகைக்கு எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள பத்தனம் திட்டா பகுதியில், பள்ளியில் பொதுத்தேர்வுக்கு முந்தைய நாள் உபச்சார நிகழ்ச்சியில் ஸ்டண்ட் செய்வதற்காக 10ம் வகுப்பு மாணவர்கள் BMW காரை ரூ.2000 கொடுத்து வாடகைக்கு எடுத்துள்ளனர்.

இதையடுத்து, பள்ளி மைதானத்தில் BMW காரில் இரண்டு இளைஞர்கள் புழுதிபறக்க சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை பார்த்த ஆசிரியர் உடனே பள்ளியின் வாயிற்கதவை மூடிவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரைப் பறிமுதல் செய்து காரை ஓட்டிய இரண்டு இளைஞர்களை கைது செய்தனர். பின்னர் இரண்டு இளைஞர்களையும் ஜாமினில் விடுவித்தனர். இந்தச் சம்பவத்தால் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

school student bm car rent in kerala


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->