பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை..வாலிபரை நிர்வாணமாக்கி தர்மஅடி கொடுத்த மக்கள்!  - Seithipunal
Seithipunal


பள்ளிக்கு நடந்து சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு சிறுமியின் குடும்பத்தினர் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். மேலும் அவரது ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள காஷிமிரா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் , தினமும் பள்ளிக்கு நடந்தே சென்று வருவது வழக்கம்.  தினமும் பள்ளிக்கு நடந்தே சென்றுவந்த அந்த சிறுமியை  நோட்டமிட்ட 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தினமும் சிறுமியை பின்தொடர்ந்து சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக  கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த சிறுமி, தனக்கு நடந்த கொடுமை பற்றி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளாள் என சொல்லப்படுகிறது.

இதனால் இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் குடும்பத்தினர், ஆத்திரம் அடங்காமல் நிதானமாக யோசிக்க தொடங்கி மறுநாள் அந்த நபர் வரும் சாலையில் மறைந்திருந்து கண்காணித்து வந்தனர். அப்போது வழக்கம்போல் அந்த நபர் சிறுமியை பின்தொடர்ந்து வந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதைக்கண்டு ஆத்திரம் அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் அவரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். அடி அடி என பொளந்துகட்டினர். மேலும் அவரது ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

மேலும் இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியின் குடும்பத்தினரிடம் இருந்து அந்த நபரை மீட்டு கைது செய்தனர். குடும்பத்தினர் அவரை தாக்கி நிர்வாணமாக்கி சாலையில் அழைத்து சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sexual abuse of a school girl People strip young men naked and beat them up 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->