கடையில் பொருள் வாங்காத ஆத்திரம் - வாடிக்கையாளருக்கு எமனாக மாறிய கடைக்காரர்.!
shop owner arrested for kill customer in delhi
நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள சங்கூர்பூர் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ். இவர் அதேபகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தக் கடையில், விக்ரம் குமார் என்பவர் தனது வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி வந்தார். இதற்கிடையே, கடைக்காரர் லோகேசுக்கும் வாடிக்கையாளர் விக்ரம் குமாருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.
![](https://img.seithipunal.com/media/crime kjsd-zy8zv.png)
இதனால், விக்ரம் லோகேஷ் கடையில் மாளிகைப்பொருட்களை வாங்குவதை நிறுத்திவிட்டு வேறு கடையில் வாங்கியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடந்த ஞாயிற்றுகிழமை இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் முற்றிய நிலையில் விக்ரமை மளிகை கடைக்காரர் லோகேஷ் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.
மேலும், கத்தரிக்கோலால் விக்ரம் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் விக்ரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் விரைந்து வந்து விக்ரமின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
![](https://img.seithipunal.com/media/CRIME 004.jpg)
அதன் பின்னர், போலீசார் மளிகை கடைக்காரர் லோகேஷ் மற்றும் அவரது மகன்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையில் பொருட்களை வாங்காததால் வாடிக்கையாளரை கடைக்காரர் அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
shop owner arrested for kill customer in delhi