உத்தரபிரதேசத்தில் சட்டமும் ஒழுங்கும் முற்றிலும் சீரழிந்துவிட்டது - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி! - Seithipunal
Seithipunal


கடனாக பெற்ற தொகையை திருப்பி செலுத்தாத விவகாரத்தில், அந்த விவகாரத்தை குற்றவியல் வழக்காக மாற்றியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, நேற்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கின் விசாரணைக்கிடையில், நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறியதாவது: "உத்தரபிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சி முற்றிலும் சீரழிந்து உள்ளது.

பொதுவான சிவில் பிரச்னைகளை குற்றவியல் வழக்குகளாக மாற்றுவது சட்டவிரோதமான செயலாகும். இது தொடர்ச்சியாக நடந்து வருவதும், அத்துடன் இதற்கென ஏற்கனவே நாங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளோம் என்பதும் கவலைக்கிடம்."

மேலும், "இத்தகைய நடைமுறைகள் தினசரி நடைபெறுவது மிகவும் ஆச்சரியமளிக்கிறது. கடனாக பெற்ற பணத்தை செலுத்தவில்லை என்பதற்காக, நேரடியாக குற்றவியல் வழக்காக மாற்றுவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இது சட்டத்தின் அடிப்படைகளுக்கு எதிரானது. இத்தகைய செயல்கள் நீதிமுறையின் நம்பகத்தன்மையையும், சமூகத்தின் நியாயமே வேரோடே கிள்ளும் வகையிலாக உள்ளது" என்றார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Supreme Court say Uttar Pradesh law and order issue Yogi Adityanath 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->