நடத்தையில் சந்தேகம்... தூக்குப்போட்ட இளம்பெண்! - Seithipunal
Seithipunal


கணவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்து இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த நெலமங்களா தாலுகா பாகலகுண்டே பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவரது கணவர் நவீன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஐஸ்வர்யா அதே பகுதியில் அழகு நிலையம் நடத்தி வந்தார். இந்தநிலையில் ஐஸ்வர்யா, கணவர் நவீனின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் , மனைவியிடம் கூறாமல் நவீன் தனியாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தர்மஸ்தலாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். இதை அறிந்த ஐஸ்வர்யா, நவீன் வீடு திரும்பியதும் கடந்த ஒரு வாரமாக தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் கடும் கோபத்தில் இருந்த ஐஸ்வர்யா.நேற்று காலை மீண்டும் கணவருடன் தகராறில் ஈடுபட்டார்.இதனால் மனஉளைச்சலில் இருந்த ஐஸ்வர்யா சம்பவத்தன்று படுக்கை அறையில் இருந்த மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பாகலகுண்டே போலீசார் விசாரணை நடத்தியதில் நவீன் தர்மஸ்தலாவுக்கு பெண் ஒருவருடன் சென்றதாக கருதி மனமுடைந்து ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்து இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Suspicion of behavior A young girl hanging


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->