ஒரே வருடத்தில் 3000 சிறுமிகள் & பெண்கள் பாலியல் வன்கொடுமை! அதிரவைக்கும் ரிப்போர்ட்! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டில் மட்டும் தெலுங்கானா மாநிலத்தில் சிறுமிகள் உட்பட 2,945 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பதாக வெளியான புள்ளி விவரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில், 1,912 பெண்கள் தங்களுக்கு நன்கு அறிந்தவர்களால் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பதாக அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதன் விவரம் பின்வருமாறு:

கடந்த மூன்றாண்டுகளை ஒப்பிடும்போது, 2024-ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

15 முதல் 18 வயது வரையிலான சிறுமிகள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.

மொத்த வழக்குகளில் 82 சதவீதம் (1,251 பேர்) சிறுமிகள்,

இந்த சம்பவங்களில் பருவ வயது காதல் ஒரு காரணமாக இருக்கிறது. 

பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் ஆசை வார்த்தைகளால் ஏமாந்து வன்கொடுமைக்கு ஆளாகின்றன.  

போலீசார் இந்த வழக்குகளுக்கு முக்கியத்துவம் அளித்து, 90 சதவீத வழக்குகளை தீர்த்துள்ளனர். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் ₹5.42 கோடி இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது என்று அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Telangana Harrasment case report


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->