கூட்டு பலாத்காரம் செய்து ஓடும் காரில் இருந்து வீசப்பட்ட சிறுமி..! பேஸ்புக் காதலால் ஏற்பட்ட விபரீதம்...! - Seithipunal
Seithipunal


திரிபுரா மாநிலத்தில் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து ஓடும் காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திரிபுரா மாநிலம் உதய்பூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கு பேஸ்புக் மூலம் 21 வயதுடைய இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு, கடந்த ஆறு மாதங்களாக இளைஞருடன் பேசி வந்துள்ளார். இதையடுத்து, இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று சிறுமியிடம் இளைஞர் நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறி பூங்காவிற்கு வரவழைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பூங்காவிற்கு வந்த சிறுமியை சந்தித்த இளைஞர், வலுக்கட்டாயமாக சிறுமியை அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இளைஞர்களுடன் வந்து இரண்டு நபர்கள் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சிறுமியை காரில் ஏற்றிச் சென்று, ராஜர்பக் பகுதியில் ஓடும் காரில் இருந்து சிறுமியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் இளைஞரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The girl was gang raped and thrown from the moving car in tripura


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->