சம்பந்தியுடன் ஓட்டம் பிடித்த பெண்; காவல் நிலையத்தில் காத்திருந்த கணவர்!
The woman who ran away with the brother in law Husband waiting at police station
சம்பந்தியுடன் பெண் ஓடிய சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் பாடன் மாவட்ட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பாடன் மாவட்ட்டத்தை சேர்ந்தவர் லாரி டிரைவர் சுனில் குமார். இவருக்கு 43 வயதில் மம்தா என்ற அழகான மனைவியும் 4 பிள்ளைகளும் உள்ளனர். இதில் 4 பிள்ளைகளில் மூத்த மகளுக்கு சைலேந்திரா என்பவரின் மகனுடன் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்தநிலையில் திருமணத்திற்குபின் மூத்த மகளின் மாமனாரும், சம்பந்தியுமான சைலேந்திராவுடன் லாரி டிரைவர் சுனில் குமார் மனைவி மம்தாவுக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. லாரி டிரைவரான சுனில் குமார் மாதம் ஒருமுறை மட்டுமே வீட்டிற்க்கு வரும் வழக்கத்தை கொண்டுள்ளதை சாதகமாக பயன்படுத்திய சைலேந்திரா அவர் வீட்டுக்கு சென்று அடிக்கடி ஜாலியாக இருத்துள்ளார்.
மேலும் சம்பந்தி சைலேந்திராவுக்கும், மம்தாவுக்கும் இடையேயான நெருக்கமான பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. சுனில் குமார் வீட்டில் இல்லாத நேரத்தில் பிள்ளைகளை வேறு அறையில் தங்குமாறு கூறிவிட்டு சைலேந்திராவும், மம்தாவும் ஒரே அறையில் தங்கி அடிக்கடி ஜாலியாக இருத்துள்ளார்.
இந்நிலையில், மம்தா வீட்டில் இருந்த நகை, பணத்தை எடுத்துக்கொண்டு மம்தா தனது கள்ளக்காதலனான சம்பந்தி சைலேந்திராவுடன் ஓட்டம் பிடித்துள்ளார்.மனைவி சம்பந்தியுடன் ஓடியது தொடர்பாக மம்தாவின் கணவர் சுனில் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தியுடன் பெண் ஓடிய சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் பாடன் மாவட்ட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The woman who ran away with the brother in law Husband waiting at police station