அறிவிப்பு!!! திகார் சிறைச்சாலை புறநகர் பகுதிக்கு இடம்பெயரும்...!!! - டெல்லி பட்ஜெட்டில்....?
Tihar Jail shifted suburban area Delhi Budget Announcement
திகார் சிறைச்சாலை டெல்லியில் 1958-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது இந்தியாவின் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்றான இந்த சிறைச்சாலை, 400 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவை கொண்டுள்ளது.

முதல் மந்திரி ரேகா குப்தா:
மேலும் 9 மத்திய சிறைச்சாலைகளைக் கொண்டது .இந்நிலையில், முதல் மந்திரி ரேகா குப்தா டெல்லி சட்டசபையில் இன்று காலையில் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
அப்போது அவர் சிறைச்சாலை பற்றி குறிப்பிட்டதாவது,"திகார் சிறைச்சாலை நகரின் புறநகர்ப் பகுதிக்கு மாற்றும் திட்டம் கொண்டு வரப்படும்.
மேலும் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அதற்கான கணக்கெடுப்பு மற்றும் ஆலோசனை சேவைகளுக்காக ரூ.10 கோடியை ஒதுக்கப்படும்.
இந்த முடிவு குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் இந்தச் சிறைச்சாலை இருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக எடுக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.
English Summary
Tihar Jail shifted suburban area Delhi Budget Announcement