சுற்றுலா பயணிக்கு நேர்ந்த சோகம்...! ஆக்ரா இளைஞரை கைது செய்ய காரணம் என்ன?
tourist person got harrasment by agra youth man
உத்தரப் பிரதேசத்தில் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் இடத்தைப் பார்வையிட வந்தவர் 28 வயது வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி.இவர் செக் குடியரசைச் சேர்ந்தவர்.

இவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி,போலீசார் நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.இதில் பாதிக்கப்பட்ட செக் நாடு பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், 'கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி மதியம் 1 மணியளவில் தாஜ்மகாலை பார்வையிட ஷாம்ஷான் காட் சாலையில் நடந்து செல்லும்போது மர்ம நபரால் தகாத முறையில் தொட்டு துன்புறுத்தப்பட்டேன்' எனத் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அந்த சாலையில் சி.சி.டி.வி கேமரா பதிவை ஆராய்ந்ததில் அந்த நபர் ஆக்ராவை சேர்ந்த கரண் ரத்தோர் என்று தெரியவந்தது.
இந்நிலையில், அவரை தேட பல குழுக்கள் நியமிக்கப்பட்டன.இதற்கிடையே, நேற்று அவர் கைது செய்யப்பட்டதாக துணை கமிஷ்னர் சையத் அரீப் அகமது தெரிவித்தார்.
மேலும் அந்நபருக்கு தகுந்த தண்டனை தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
tourist person got harrasment by agra youth man