உளவுத்துறை அதிகாரியிடம் கைவரிசையைக் காட்டிய ஆட்டோ ஓட்டுனர்கள் கைது.!   - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் உளவு துறை பிரிவில் பாதுகாப்பு உதவி செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் மணீஷ் பாண்டே. இந்த நிலையில் மணீஷ் பாண்டே பணி முடிந்து ஆர்.கே. ஆஷ்ரம் மார்க் பகுதியில் போக்குவரத்து சிக்னலில் நள்ளிரவு 1 மணியளவில் ஆட்டோவுக்காக காத்திருந்துள்ளார்.

அப்போது, அந்த வழியாக வந்த இரண்டு பேர் மணீஷை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து, முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.1,500 பணம் உள்ளிட்டவற்றை பறித்து விட்டு தப்பி விட்டனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். 

அதன் படி போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேகத்திற்குரிய இரண்டு பேரை அடையாளம் கண்டு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மணீஷ் பாண்டேவின் ஆதார் அட்டை, கிரெடிட் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரூ.725 பணம், குற்றத்திற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் வழிப்பறியின்போது பயன்படுத்தப்பட்ட ஆட்டோ உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினர். 

அவர்கள், இருவரும் பீகார் மாநிலத்தின் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் இருந்து வந்து டெல்லியில் ஆட்டோ ஓட்டுநர்களாக பணியாற்றி வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two peoples arrested for robbery to government employees in delhi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->