மாவு அரைத்தபோது மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி - கேரளாவில் சோகம்.!! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டம் மங்கரா அடுத்த மஞ்சக்கரா பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணதாஸ். இவருடைய மனைவி சுபா பாய் கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இந்தச் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், சுபா பாயை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சுபா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் மின் வயரில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்சாரம் கசிந்து, கிரைண்டரில் மாவு அரைத்த சுபா பாயை தாக்கியதில் அவர் இறந்தது தெரியவந்தது. 

இதுகுறித்து மங்கரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

women died for electric shock attack in kerala


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->