ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 'மாநில மன்றம்' அமைப்பு; தமிழக அரசு அறிக்கை ..! - Seithipunal
Seithipunal


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி, முழுமையாக அவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய,மாநில மன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் தலைமையில், அத்துறை அமைச்சர், நிதி அமைச்சர், வனத்துறை அமைச்சர், எம்.பி., மற்றும்,எம்.எல்.ஏ.,க்கள் அடங்கிய குறித்த 'மாநில மன்றம்' அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து, அறிக்கை அளிக்கும் என்று கூறப்படுகிறது. அத்துடன், மாநில மன்றம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு செயல் திட்டத்திற்கு திட்டமிடுதல், ஒப்புதல் அளித்தல், செயல்படுத்துதல், கண்காணித்தல் போன்ற பணிகளை செய்யும் என்றும் கூறப்படுகிறது.

குறித்த மாநில மன்றத்தின் முதல் கூட்டம், 20ஆம் தேதி, தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ளதாக அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Adi Dravidian and Tribal State Council


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->