திமுகவில் அடுத்தடுத்து வருவது கருத்தியல் வாரிசு - திருமாவளவன் புகழாரம்! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம்: திமுகவின் 75ம் ஆண்டு பவளவிழா பொதுக்கூட்டம் தொடக்கி நடந்து வருகிறது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்ற உள்ளார்.

மேலும், திமுகவின் 75ம் ஆண்டு பவளவிழா பொதுக்கூட்டத்தில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

திமுக பவளவிழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது, "தேர்தலை நோக்கி மட்டும் பயணிக்கக் கூடிய கட்சி அல்ல திமுக. தேசிய கல்வி கொள்கை, மும்மொழி கொள்கை  உள்ளிட்டவை எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று உறுதியுடன் இருக்கும்  திரவிடியன் ஸ்டாக் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‌‌.

2019, 2021, 2024 என திமுக கூட்டணி தொடர் வெற்றிகளைப் பெற்று வருகிறது. தேர்தல் முடிந்ததும் திமுக கூட்டணி  உடைந்து போகாமல் இன்றைக்கும் வலுவாக இருக்கக் காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திராவிட முன்னேற்றக் கழகம் - திராவிடர் கழகம் ஆகிய  இரட்டைக்குழல் துப்பாக்கியோடு மூன்றாவது குழலாக என்றென்றைக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கும்.

75 ஆண்டுகளாக வீறுநடை போடுகிறது திமுக, சமூக நீதிக்கு இந்தியா முழுவதும் வழிகாட்டும் இயக்கம் திமுக. திமுகவில் அடுத்தடுத்து வருவது கருத்தியல் வாரிசு" என்று திருமாவளவன் பேசினார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanchipuram dmk75 VCK Thirumavalavan 


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->